search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி உரிமையாளர் வீட்டில் கொள்ளை
    X

    உடைக்கப்பட்ட பீரோவை படத்தில் காணலாம்.

    லாரி உரிமையாளர் வீட்டில் கொள்ளை

    • பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த சுமார் 14 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.10 ஆயிரத்தை மர்மகும்பல் திருடி சென்றது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து, வீட்டில் கைவரிசை காட்டிய மர்மகும்பலை தேடி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை அடுத்துள்ள ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 35). இவர் லாரி உரிமையாளர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டை பூட்டிவிட்டு, பச்சியப்பன்கொட்டாய் பகுதியில் உள்ள அவரது மாமனார் வீட்டிற்கு சொந்த வேலையாக குடும்பத்துடன் சென்றதாக கூறப்படுகிறது.

    பின்னர் மீண்டும் நேற்று காலை, ஈச்சம்பட்டி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து அவர் பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த சுமார் 14 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.10 ஆயிரத்தை மர்மகும்பல் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, வீட்டில் கைவரிசை காட்டிய மர்மகும்பலை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×