search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் அருகே கார் மோதி சாலை பணியாளர் சாவு
    X

    தியாகதுருகம் அருகே கார் மோதி சாலை பணியாளர் சாவு

    • தியாகதுருகம் நோக்கிச் சென்ற கார் இவரது மொபட் மீது மோதியது.
    • இவரது மகன் ஜீவானந்தம் தியாகதுருகம் போலீசில் புகார் அளித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 47) கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலை துறையில் சாலை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது மொபட்டில் தியாகதுருகம் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வீரசோ ழபுரம் பிரிவு சாலையில் சாலையை கடந்த போது கள்ளக்குறிச்சியில் இருந்து தியாகதுருகம் நோக்கிச் சென்ற கார் இவரது மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வம் படுகாயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் செல்வம் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து இவரது மகன் ஜீவானந்தம் தியாகதுருகம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் தியாகதுருகம் அருகே சிறுவல் கிராம த்தைச் சேர்ந்த கார் டிரைவர் கார்த்திகேயன் (23) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

    Next Story
    ×