என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![நெல்லையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயணம் நெல்லையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயணம்](https://media.maalaimalar.com/h-upload/2023/02/04/1831325-road-safety-1.webp)
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
நெல்லையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயணம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மேலப்பாளையம் வி.எஸ்.டி. பள்ளிவாசல் முன்பு தொடங்கிய இந்த பேரணியை போக்கு வரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.
- நெல்லை மாவட்டத்தில் தினந்தோறும் விபத்து அதிகமாக நடந்து வருகிறது
நெல்லை:
நெல்லை மாவட்ட ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி களின் கூட்டமைப்பு, ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி சங்கம், அரசு போக்குவரத்து துறை இணைந்து சாலை பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு நடை பயணத்தை நடத்தியது.
பேரணி
மேலப்பாளையம் வி.எஸ்.டி. பள்ளிவாசல் முன்பு தொடங்கிய இந்த பேரணியை போக்கு வரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து கொடி யசைத்து தொடங்கி வைத்தார். பேரணியானது மேலப்பாளையம் சிக்னலில் முடிவடைந்தது.
அங்கு நடந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பிரபாகரன் கலந்து கொண்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக நெல்லையில் விபத்து ஏற்படுத்தாமல் ஆட்டோ ஓட்டிய டிரைவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில்,
சாலை விதிகள்
நெல்லை மாவட்டத்தில் தினந்தோறும் விபத்து அதிகமாக நடந்து வருகிறது. இதனை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையால் விபத்துக்கள் சற்று குறைந்துள்ளது. அடுத்த ஆண்டிற்குள் விபத்தில்லா நெல்லையை உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். அதற்கு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)