search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தார்சாலை, வளர்ச்சி பணிகள் செய்யவேண்டி நகராட்சிகள் இயக்குனரிடம் கோரிக்கை மனு
    X

    நகராட்சிகள் இயக்குனரிடம் மனு கொடுக்கப்பட்ட காட்சி.

    தார்சாலை, வளர்ச்சி பணிகள் செய்யவேண்டி நகராட்சிகள் இயக்குனரிடம் கோரிக்கை மனு

    • 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு காரணமாக புதிய தார் சாலை அமைக்க முடியாமல் இருந்து வந்தது.
    • நீதிமன்ற நடவடிக்கை மேற்கொண்ட நகராட்சி நிர்வாகத்தினர், அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்று, சாலை அமைக்க வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றை அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அம்மன் நகரில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு காரணமாக புதிய தார் சாலை அமைக்க முடியாமல் இருந்து வந்தது.

    நீதிமன்ற நடவடிக்கை மேற்கொண்ட நகராட்சி நிர்வாகத்தினர், அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்று, சாலை அமைக்க வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றை அர சுக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சாலை சம்பந்தமாக ஒவ்வொரு நகரமன்ற கூட்டத்திலும் பெரும் சர்ச்சை எழுந்து வருகிறது. இதன் பொருட்டு சென்னை நகராட்சி இயக்குனர் அலுவ லகம் சென்ற, குமாரபா ளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், அம்மன் நகர் சாலை அமைக்கவும், பல வளர்ச்சித்திட்ட பணி கள் மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டி, நகராட்சி நிர்வாக இயக்கு னர் பொன்னையாவிடம் மனு கொடுத்தார்.

    இந்த மனு தொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக பொன்னையா கூறியுள்ளார். அப்போது கவுன்சிலர் ஜேம்ஸ் உள்ளிட்ட பலர் உடனி ருந்தனர்.

    Next Story
    ×