search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடையக்கோட்டை அருகே சாலையில் கொட்டிக்கிடக்கும் மணல், ஜல்லிகளால் விபத்து அபாயம்
    X

    இடையகோட்டை அருகே புல்லாகவுண்டனூரில் சாலையில் கொட்டிக்கிடக்கும் ஜல்லிக்கற்கள்.

    இடையக்கோட்டை அருகே சாலையில் கொட்டிக்கிடக்கும் மணல், ஜல்லிகளால் விபத்து அபாயம்

    • பணி முடிவுற்ற நிலையில் பல நாட்களாக தற்போது வரை சாலையிலேயே ஜல்லிக்க ற்கள் கொட்டி கிடக்கிறது.
    • பெரும் விபத்து நடந்து உயிர் சேதங்கள் ஏற்படுவதற்கு முன்பு சாலையேராம் கொட்டி கிடக்கும் மணல், ஜல்லி கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்து இடையக்கோட்டை அருகே உள்ள புல்லாகவுண்டனூரில் தாடிக்கொம்பு செல்லும் சாலையோரத்தில் கருமலையில் இருந்து வரும் ஓடையில் தடுப்பணை கட்டும்பணி நடைபெற்று வருகிறது.

    இதற்காக சாலையில் எம்சான்ட் மணல் மற்றும் ஜல்லி கற்கள் கொட்டி வைத்துள்ளனர். பணி முடிவுற்ற நிலையில் பல நாட்களாக தற்போது வரை சாலையிலேயே ஜல்லிக்க ற்கள் கொட்டி கிடக்கிறது.

    இதனால் இரவு நேரங்க ளில் இரு சக்கர வாகன ங்களில் வருபவர்களுக்கு எதிரே அதிக முகப்பு வெளிச்சத்துடன் பஸ், லாரி வரும்போது சாலையோரம் கொட்டப்பட்டுள்ள எம் சான்ட் மணல் மற்றுல் ஜல்லி குவியல்கள் மேல் வாகனங்களை விட்டு தடுமாறி காயங்களுடன் எழுந்து சென்று வருகின்ற னர்.

    இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் மிகுந்த சிர மத்துடன் கடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    பெரும் விபத்து நடந்து உயிர் சேதங்கள் ஏற்படுவ தற்கு முன்பு சாலையேராம் கொட்டி கிடக்கும் மணல், ஜல்லி கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×