என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி
- தாசில்தார் கோமதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்
- வருவாய்த்துறை, கிராம நிர்வாக அலுவலர்கள், தாசில்தார் அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வாரம் கடந்த 5-ந் தேதி முதல் வருகிற 12-ந் தேதிவரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதன்ஒருபகுதியாக கோத்தகிரி வருவாய்த்துறை சார்பில், தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தாசில்தார் கோமதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்வருவாய்த்துறை, கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், தாசில்தார் அலுவலக ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






