என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓய்வூதியம் வழங்க கோரி ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
- கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துப்பரவு பணியாளர்கள், ஒய்வு பெற்றப்பின்பு சிறப்பு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
- நிலுவையின்றி ஓய்வு பெற்ற துப்பரவு பணியாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு கிராம ஊராட்சி துப்பரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் லட்சுமணன் தலைமையில் ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:-
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துப்பரவு பணியாளர்கள், ஒய்வு பெற்றப்பின்பு சிறப்பு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. ரூ.50 ஆயிரம் பணிக்கொடை மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது ஓய்வூதியம் கிடைக்காமல் ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் சிரமம் அடைந்துள்ளனர். எனவே, நிலுவையின்றி ஓய்வு பெற்ற துப்பரவு பணியாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






