search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வார சந்தை தொடங்க கோரிக்கை
    X

     சீர்காழி ஈசான்ய தெரு 6வது வார்டு சார்பில் பகுதி சபா கூட்டம்.

    வார சந்தை தொடங்க கோரிக்கை

    • ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி தர வேண்டும் மற்றும் தேங்கி நிர்க்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என பல கோரிக்கை விடுத்தனர்.
    • பொதுமக்களின் குறைகளை கண்டறிந்து மனுக்கள் பெறப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி வாணி விலாஸ் தொடக்கப்பள்ளியில் ஈசான்ய தெரு 6வது வார்டு சார்பில் வார்டு குழு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. நகர மன்ற கவுன்சிலர் பாலமுருகன் தலைமை வைத்தார் கணக்கர்கள் ராஜகணேஷ் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜ சேகர் கலந்து கொண்டு பொதுமக்களின் குறை களை கேட்டறிந்தார் பின்பு பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்று க்கொண்டார் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் சீர்காழி ஈசான்ய தெருவில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் அருகே கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது உடனடியாக தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஈசான்ய தெருவில் மழை நீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி செய்து தர வேண்டும் மழைக் காலம் தொடங்கி விட்டதால் கொசு மருந்து அடிக்க வேண்டும் சீர்காழி நகராட்சி பகுதியில் வார சந்தை செயல்பட்ட வந்த நிலையில் கொரோனா காலத்தில் மூடப்பட்ட நிலையில் தற்போது வரை வாரசந்தை நடைபெறவில்லை உடனடி யாக மக்கள் பயன்பெறும் வகையில் இடத்தை தேர்வு செய்து வார சந்தை அமைத்து தினந் தோறும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர் கூட்டத்தில் 6வது வார்டு பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொ ண்டனர்.

    Next Story
    ×