search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி யூனியனில் பழுதான அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும் - கவுன்சிலர் கூட்டத்தில் வற்புறுத்தல்
    X

    உடன்குடி யூனியனில் பழுதான அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும் - கவுன்சிலர் கூட்டத்தில் வற்புறுத்தல்

    • முதலில் வரவு- செலவு வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
    • புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி யூனியன் கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம் கூட்டரங்கில் நடந்தது. யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கினார். யூனியன் துணைச்சேர்மன் மீரா சிராசுதீன், ஆணையாளர் ஜான்சிராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் முருங்கை மகாராஜா, செந்தில், லோபோரின், செல்வின், ராமலெட்சுமி, மெல்சி ஷாலினி, தங்க லெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். முதலில் வரவு- செலவு வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

    யூனியன் பொதுநிதியில் இருந்து ஞானியார் குடியிருப்பு, கல்லாமொழி, பிறைகுடியிருப்பு, செட்டி யாபத்து, தாங்கை கைலாசபுரம், ஆனணயூர், விஜய நாராயண புரம், வடக்கு காலன்குடி யிருப்பு, வாகை விளை, குதிரை மொழி, முந்திரிதோட்டம் ஆகிய ஊர்களில் உள்ள யூனியன் தொடக்கப்பள்ளி களில் சுமார்ட் வகுப்புகள் பணிகள் மேற்கொள்ள ரூ. 2 லட்சம் நிதி ஒதுக்கீடு மற்றும் பள்ளி மாணவர்க ளின் நலன்கருதி செம்மறி குளம் கிராமத்தில் ஊராட்சி யூனியன் தொடக்கப்பள்ளி யில் வடக்கு, தெற்கில் புதிய கட்டிடம், புதிய சமையலறை, செம்மறிகுளம் குமார லெட்சுமிபுரத்தில் அங்கன்வாடி கட்டிடம், லெட்சுமிபுரம் பஞ்கு மார சாமிபுரம், பரமன்குறிச்சி பிச்சிவிளை, தைக்காவூர், ஞானியார் குடியிருப்பு, சீர்காட்சி ஆகிய ஊர்களில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

    பின்னர் நடந்த விவாதம் வருமாறு:-

    முருங்கை மகாராஜா (அ.திமு.க.): உடன்குடி பகுதியில் தற்போது தொழில்வளம் பெருகி வருகிறது. எனவே உள்கட்ட மைப்பை மேம்படுத்த கிராமங்களை இணைக்கும் சாலைகள் அனைத்தையும் மேம்படுத்த வேண்டும். மேலும் உடன்குடி பகுதி மக்களின் நலன் கருதி உடன்குடியை தனித்தாலு காவாக அறிவிக்க வேண்டும், யூனியன் பொது நிதியை வளர்ச்சி பணிக்கு செல விடாமல் புதிய வாகனம் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இந்த நிதியை மாவட்ட நிர்வாகம் மூலம் செயல்படுத்த வேண்டும்.

    சேர்மன் (பாலசிங்): உடன்குடி பகுதியில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பழுதான சாலைகள் அனைத்தும் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. விரைவில் சீரமைப்பு பணிகள் தொடங்கும் என தெரிவித்தார்.

    Next Story
    ×