search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளிநாடுகளில் இருந்து சேலம் வருவோர் தொடர்ந்து கண்காணிப்பு
    X

    வெளிநாடுகளில் இருந்து சேலம் வருவோர் தொடர்ந்து கண்காணிப்பு

    • சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையத்துக்கு வந்திறங்கிய தாய் மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையம் வந்திறங்கிய ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

    அன்னதானப்பட்டி:

    சீனா, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாறிய பிஎப் 7 வகை கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையத்துக்கு வந்திறங்கிய தாய் மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையம் வந்திறங்கிய ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அவருடன் சேர்த்து நேற்று வரை மாநிலத்தில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்களில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சீனா, ஜப்பான், தென் கொரியா, தைவான், ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் விமான நிலையங்களில் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனிங் மற்றும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதேபோல் வெளிநாடுகளில் இருந்து சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்கள் வழியாக சேலம் மாவட்டத்திற்கு வருபவர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்றாலும், ஒரு வாரத்திற்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், " சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உருமாறிய பி.எப்.7 கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து விமான நிலையங்கள் வழியாக சேலம் வருபவர்களை கண்காணிக்க, துணை இயக்குநர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் கொடுக்கும் விவரங்கள் பெற்று, அதனடிப்படையில் அவர்கள் கண்காணிக்கப் படுகிறார்கள் என்றனர்.

    Next Story
    ×