search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூர் அருகே ஆக்கிரமிப்பு நிலங்கள்  மீட்பு
    X

    குன்னூர் அருகே ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

    • நீரோடைகள், அணைகள் ஆகிய பகுதிகளில் எவ்வளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என வருவாய்த் துறையினா் அளவீடு செய்து வருகின்றனா்.
    • அரசுக்கு சொந்தமான 1.60 ஏக்கர் நிலத்தை மீட்டு வருவா ய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூா் ஆகிய வருவாய் கோட்டங்களில் கால்வாய்கள், நீரோடைகள், அணைகள் ஆகிய பகுதிகளில் எவ்வளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என வருவாய்த் துறையினா் அளவீடு செய்து வருகின்றனா்.

    இந்த நிலையில் குன்னூர் டென்ட்ஹில் அருகே வருவாய்த்துறைக்கு சொந்தமான 1.60 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து தேயிலை பயிரிட்டு இருப்பதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதன் மதிப்பு ரூ.20 கோடி ஆகும். இதைத்தொடர்ந்து கலெக்டர் அம்ரித் உத்தரவின்பேரில் குன்னூர் தாசில்தார் சிவக்கு மார் தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆக்கிரமிப்பு நிலத்தில் விவசாய பணிகள் ஏதும் மேற்கொள்ளக் கூடாது எனவும், அதில் இருந்து வெளியேறுமாறும் வருவாய்த்துறை சாா்பில் நோட்டீஸ் மற்றும் தடுப்புகள் வைத்து அறிவிப்பு செய்யப்பட்டது.

    பின்னர் அரசுக்கு சொந்தமான 1.60 ஏக்கர் நிலத்தை மீட்டு வருவா ய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.மேலும் அரசு நிலங்களை ஆக்கிரமி ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றி க்கொள்ள வேண்டும் என்றனர்.

    Next Story
    ×