search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் அம்மாபேட்டையில் துணிகரம் ரெடிமேடு கடை, பேக்கரியில் பணம் கொள்ளை
    X

    சேலம் அம்மாபேட்டையில் துணிகரம் ரெடிமேடு கடை, பேக்கரியில் பணம் கொள்ளை

    சேலம் அம்மாபேட்டையில் துணிகரம் ரெடிமேடு கடை, பேக்கரியில் பணம் கொள்ளையடித்தனர்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை அடுத்த மாசி நாயக்கன்பட்டியில் வில்சன் என்பவர் ரெடிமேட் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பணத்தை எடுத்துச் சென்றனர்.

    இதேபோல அருகிலுள்ள ராமன் என்பவர் நடத்தி வந்த பேக்கரி கடைக்குள் நுழைந்த அந்த கொள்ளைக் கும்பல் அங்கிருந்த பணத்தையும் எடுத்து சென்றனர். இரண்டு கடைகளிலும் சேர்த்து ரூ.15 ஆயிரம் பணம் கொள்ளை போனதாக போலீசார் தெரிவித்தனர் .

    மேலும் அந்த பகுதியில் மற்றொரு கடையில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் இங்கு பணம் ஏதும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர் .இதேபோல சேலம் உடையாப்பட்டி உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று கேட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்றனர் . ஆனால் கோவிலில் எந்த பொருளும் திருட்டு போகவில்லை.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள் .ஒரே நாள் இரவில் 4 இடங்களில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×