search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னதானப்பட்டியில் வீட்டில் கஞ்சா பதுக்கிய ரவடி கைது
    X

    அன்னதானப்பட்டியில் வீட்டில் கஞ்சா பதுக்கிய ரவடி கைது

    • பிரபல ரவுடியான இவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது.
    • போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தி, அங்கு மறைத்து வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    சேலம்:

    சேலம் அன்னதானப்பட்டி சண்முகா நகரை சேர்ந்தவர் குணசேகரன் என்கிற கெத்தை சேகர். பிரபல ரவுடியான இவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது.

    இன்ஸ்பெக்டர் சந்திரகலா தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். அப்போது ரவுடி கெத்தை சேகர் வீட்டில் இல்லை. இதையடுத்து போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தி, அங்கு மறைத்து வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கெத்தை சேகரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று கெத்தை சேகர் போலீசாரிடம் சிக்கினான். அவரிடம் அரை கிலோ கஞ்சா இருந்தது. அதையும் பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×