search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆவுடையானூர் அருகே இடிந்து விழும் அபாய நிலையில் ரேஷன் கடை -  நடவடிக்கை எடுக்க கோரிக்கை
    X

    இடிந்து விழும் அபாய நிலையில் காணப்படும் ரேஷன் கடையின் மேற்கூரை.


    ஆவுடையானூர் அருகே இடிந்து விழும் அபாய நிலையில் ரேஷன் கடை - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    • பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சி மாடியனூரில் கூட்டுறவு ரேஷன் கடை இயங்கி வருகிறது.
    • கடையின் மேற்கூரை பகுதிகளில் சிமெண்ட் பூச்சு உடைந்து உள்ளே உள்ள கம்பிகள் அனைத்தும் வெளியில் தெரியும் வண்ணம் அபாய நிலையில் இடியும் தருவாயில் காணப்படுகிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சி மாடியனூரில் கூட்டுறவு ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த ரேஷன் கடையினை அப்பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கடையின் மேற்கூரை பகுதிகளில் சிமெண்ட் பூச்சு உடைந்து உள்ளே உள்ள கம்பிகள் அனைத்தும் வெளியில் தெரியும் வண்ணம் அபாய நிலையில் இடியும் தருவாயில் காணப்படுகிறது.

    ரேஷன் கடையில் பெரும் விபத்துக்கள் ஏற்படும் முன் உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகளிடம் மாடியனூர் பொதுமக்கள் சார்பில் பலமுறை புகார்கள் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அடுத்த சில நாட்களில் பருவமழை காலம் தொடங்கவுள்ளதால் ரேஷன் கடையின் மேற்கூரையானது மேலும் வலுவிழந்து உயிர்ச் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே எந்த ஒரு அசம்பாவிதம் நடப்பதற்கு முன் மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவுடையானூர் பகுதியைச் சேர்ந்த தமிழன் மக்கள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


    Next Story
    ×