என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
    X

    ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

    • அரிசி மற்றும் பிக் அப் வேனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி தலைமையில் போலீசார் சுமதிஸ்ரீ, ஆனந்த், சக்திவேல் ஆகியோர் கெலமங்கலம் ராயக்கோட்டை சாலையில் உள்ளுக்குறிக்கி கிராமத்தில் உள்ள மசூதி அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த பிக் அப் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 50 கிலோ எடை கொண்ட, 50 சாக்கு பைகளில் 2.50 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அரிசியை பதுக்கி வைத்திருந்த தருமபுரி மாவட்டம் பாலக்கோடு முத்துகவுண்டர் தெருவை சேர்ந்த நஞ்சப்பன்(41), கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த தொட்டதிம்மனஅள்ளி செல்வராஜ் (46) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்கள் அரிசி மற்றும் பிக் அப் வேனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், வேனில் கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசியை கொல்லப்பட்டி, பிள்ளையார்அக்ரஹாரம், புல்லட்டி, உள்ளுகுறுக்கி சுற்றுவட்டார கிராமங்களில் குறைந்த விலைக்கு வாங்கி, அதை கர்நாடகாவிற்கு கடத்தி சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×