என் மலர்
உள்ளூர் செய்திகள்

செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
- பைக் பறிமுதல்
அரக்கோணம்:
அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா தலைமையில் போலீசார் எஸ் ஆர் கே பகுதி மற்றும் புதிய பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மங்கம்மா பேட்டை பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரன் (வயது 22) என்பதும், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரிபில்ஸ்பேட்டை பகுதியில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
பின்னர் கோடீஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த பைக்கை பறிமுதல் போலீசார் செய்தனர்.
Next Story






