search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
    X

    சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

    • போக்சோ சட்டம் பாய்ந்தது
    • போலீசார் சிறையில் அடைத்தனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 11 வயதுடைய சிறுவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்.

    இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவர் அச்சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து சிறுவன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக சிறுவனின் தந்தை காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×