என் மலர்
உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மர்ம சாவு
- தந்தை கண்முன்னே மகள் இறந்த பரிதாபம்
- போலீஸ் விசாரணை
நெமிலி:
வாலாஜா அடுத்த பாகவெளி குப்பத்து மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமன்.விவசாயம் செய்து வருகிறார்.
இவருக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனர்.இதில் 2-வது மகளான காயத்ரி (21).பிஏ தமிழ் பட்டப் படிப்பை முடித்து விட்டு சுங்குவார் சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். சம்பவத்தன்று அதிகாலை படுக்கையில் இருந்து எழுந்து தனக்கு மயக்கம் வருவதாக தந்தையிடம் கூறினார்.
உடனடியாக அவரை பைக்கில் ராமன் வாலாஜா தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.அங்கிருந்த டாக்டர்கள் அவரை பரிசோதித்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.கண்முன்னே மகள் இறந்ததை பார்த்த தந்தை ராமன் கதறி அழுதார்.
இதுகுறித்து அவர் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தர ராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.






