search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரக்கோணத்தில் உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டி பெரிய திரையில் ஒளிபரப்பு
    X

    அரக்கோணத்தில் உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டி பெரிய திரையில் ஒளிபரப்பு

    • ஒரே இடத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு
    • கால்பந்து ரசிகர்கள் ஆரவாரம்

    அரக்கோணம்:

    உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி கத்தாரில் அர்ஜென்டினா பிரான்ஸ் கிடையே மிகவும் பரபரப்பாக நடைபெற்றது.

    இந்தப் போட்டியை காண அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் கால்பந்து ரசிகர்களுக்காக பெரிய திரை அமைத்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    இந்த ஒளிபரப்பின் போது இரு அணிகளும் சம பலமுடன் விளையாடி 3.3 என்ற கோள் கணக்கில் ஆட்டம் நிறைவுற்ற நிலையில் கூடுதல் நேரத்திலும் இரு அணியினரும் கோல் அடித்து சமநிலை அடைந்தனர். அதனை தொடர்ந்து பெனால்டி ஷூட்அவுட் முறையில் அர்ஜென்டினா வீரர்கள் கோல் அடித்து வெற்றி பெற்றனர்.

    அர்ஜென்டினாவின் வெற்றியை அரக்கோணம் கால்பந்து ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடினர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கால்பந்து போட்டி நேரடி ஒளிபரப்பை பெரிய திரையில் கண்டு மகிழ்ந்து ஆரவாரம் செய்தனர்.

    Next Story
    ×