search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் மோதி தொழிலாளி சாவு
    X

    பைக் மோதி தொழிலாளி சாவு

    • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    திமிரி அடுத்த கணியனூர் கிராமத்தை சேர்ந்தவர் கோட்டி (வயது 45), கூலித் தொழிலாளி.

    இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் சாலையை கடக்கும் போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்குள்ளவர்கள் மீட்டு கலவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோட்டி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து கோட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தை ஏற்படுத்திய டி.புதூர் கிராமத் தைச் சேர்ந்த குப்பன் (60) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×