என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ெரயில் பாதை சீரமைப்பு
    X

    ெரயில் பாதை சீரமைப்பு

    • ராணிப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்
    • ஆற்காட்டிற்கு பஸ்கள் இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் சீக்க ராஜபுரம் அருகே, சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சா லையில் அமைந்துள்ள ெரயில் பாதையை அகலப்படுத்தி, உறு திப்படுத்தும் பணி தொடங்கவுள்ளது. இதற்காக இப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, பெங்களூர், சித்தூர், காட்பாடி மார்க்கத்தில் இருந்து வரும் வாக னங்கள் 'பெல்' சாலையில் திரும்பி செல்ல வேண்டும். அங்கிருந்து மலைமேடு ெரயில்வே மேம்பாலம் வழியாக சென்று அக்ராவரத்தில் பொன்னை சாலையில் நுழைய வேண்டும். அங்கிருந்து இ.எஸ்.ஐ.ஆஸ்பத்திரி அருகே சென்னை - மும்பை சாலையை அடையலாம். அங்கிருந்து சென்னை செல்லலாம்.

    இதேபோல் சென்னை மார்க்கத்தில் இருந்து ராணிப்பேட்டை வழியாக வரும் வாகனங்கள் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகில் பொன்னை சாலைக்குள் திரும்ப வேண்டும். அங்கிருந்து அக்ராவரத்தில் 'பெல்' சாலைக்குள் நுழைந்து ெரயில்வே மேம்பாலம் வழியாக சென்று சீக்கராஜபுரம் அருகே சென்னை - மும்பை சாலையில் இணையலாம். அங்கிருந்து காட்பாடி, சித்தூர், பெங்க ளூருக்கு செல்லலாம்.

    இந்த போக்குவரத்து மாற்றத்தினால் திருவலம், காட்பாடி மார்க்கத்தில் இருந்து சிப்காட், புளியந்தாங்கல் மற்றும் அப்ப குதியில் உள்ள பள்ளிகள், தொழிற்சா லைகளுக்கு வருபவர்கள் பெரும் சிரமத் துக்குள்ளாவார்கள். அவர்கள் கிட்டதட்ட 5 கிமீ சுற்றி வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் காட்பாடி, சித்தூர் மார்க்கமாக செல்லவேண்டிய புளியந்தாங்கல், நரசிங்கபுரம் பகுதியில் வசிப்போரும், சிப்காட் குடியிருப்பு பகு தியில் வசிப்போரும் பஸ் போக்குவரத்து இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே ஆற்காடு, வாலாஜா, ராணிப் பேட்டை மார்க்கத்தில் இருந்து சீக்கராஜ புரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரையிலும், அங்கிருந்து ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடுக்கும் டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×