search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக்குகள் மீது டிராக்டர் மோதி டிரைவர் பலி
    X

    பைக்குகள் மீது டிராக்டர் மோதி டிரைவர் பலி

    • ஒருவர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜா அடுத்த நாராயணகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் நேதாஜி (23) நெல் அறுவடை எந்திர டிரைவராக பணியாற்றி வந்தார்.

    வாலாஜா அடுத்த புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (34) இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு தனித்தனி பைக்குகளில் படியம்பாக்கம் தனியார் கேஸ் குடோன் அருகே வந்த போது எதிரே வந்த டிராக்டர் இவர்கள் வந்த பைக்குகள் மீது மோதியது.

    இதனையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் நேதாஜி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மோகன் மேல்சி கிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்ப வம் குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×