என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டியிடம் செயின் பறிப்பு
    X

    மூதாட்டியிடம் செயின் பறிப்பு

    • பைக்கில் தப்பிய கொள்ளையன்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    பாணாவரத்தை அடுத்த போளிப்பாக்கம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் ஆண்டாள் (வயது 75). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று ஆண்டாள் வீட்டில் இருந்து பக்கத்து தெருவில் வசிக்கும் மகன் வீட்டிற்கு நடந்து சென்றார். திரவுபதி அம்மன் கோவில் அருகே சென்ற போது பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென ஆண்டாள் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மோட் டார் சைக்கிளில் தப்பி சென்றார்.

    இதுகுறித்து ஆண்டாள் பாணாவரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×