என் மலர்
உள்ளூர் செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது
- 5 பாக்கெட்டுகள் சிக்கியது
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கத்தை அடுத்த ஓச்சேரி கிராமத்தில் உள்ள கடைகளில் அவளுர் போலீஸ் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் அருள்மொழி தலைமையிலான போலீசார், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகி றதா என்பது குறித்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் அப் துல்ரகுமான் என்பவரின் மகன் ஆசிக் (வயது 27) என்பவருக்கு சொந்தமான கடையில் சோதனை செய்தபோது 5 பாக்கெட் தடைசெய்யபட்ட ஹான்ஸ் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story






