என் மலர்
உள்ளூர் செய்திகள்

தெருக்கூத்து கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை
- இறந்து விடுவேன் என கூறி வந்தார்
- போலீசார் விசாரணை
கலவை:
கலவை அடுத்த கரிக்கந் தாங்கல் கிராமத்தைச்சேர்ந்த முனுசாமி என்பவர் தெருக் கூத்து நாடககம்பெனி நடத்தி வருகிறார். தெருக்கூத்து நாடக கம்பெனியில் ஸ்ரீதர் (வயது 26), அருண் (24) ஆகிய 2 மகன்களும் தெருக்கூத்து நாடகத்தில் நடித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு சுண் டிவாக்கம் கிராமத்தில் தெருக் கூத்து நாடகம் நடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளனர்.
இரவு 10.30 மணி அளவில் 3 பேரும் தூங்கசென்றனர். நள்ளிரவில் ஸ்ரீதர் எழுந்து பார்த்தபோது அவரது தம்பி அருண் மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.
ஸ்ரீதர் கூச்சலிடவே தந்தை முனுசாமி அதிர்ச்சியில் எழுந்தார். பின்னர் அவர்கள் அருணை கீழே இறக்கி 108 ஆம்புலன்சை வரவைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகதெரிவித்த னர். அவர் 2 வருடமாக வலிப்பு நோயால் அவதிப் பட்டுவந்துள்ளார். அடிக்கடி இ விடுவேன் என்று அருண் கூறி வந்தார்.
இந்த நிலையில் வலிப்பு நோயால் அருண் தூக்குப்போட்டுக் கொண்டார் என்று முனு சாமி தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சர வணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






