என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்திரை கட்டண வசூல் சிறப்பு முகாம்
    X

    முத்திரை கட்டண வசூல் சிறப்பு முகாம்

    • ஆற்காடு சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    ஆற்காடு, கலவை ஆகிய இடங் களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப் பட்டு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஆவணங்க ளில் குறைவு, முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டணம், நிலுவைத்தொகை அசல் மற்றும் வட்டி ஆகியவற்றை தவணை முறையில் செலுத்தி தங்களுடைய ஆவணங்களை உடன் பெற்றுக் கொள்வதற்கான சிறப்பு முனைப்பு இயக்க முகாம் ஆற்காடு சார்பதிவாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது முகாமிற்கு ராணிப்பேட்டை துணை பதிவுத்துறை தலைவர் சுதா மல்லையா தலைமை தாங்கினார்.

    தனித்துணை கலெக்டர் (முத்திரை) ராமகிருஷ்ணன், மாவட்ட பதிவாளர் (நிர் வாகம்) வாணி, சார்பதிவாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பத்திரப்பதிவு செய்யப்பட்டு பதிவு கட்டணம் செலுத்தாத நபர்கள் பதிவு கட்டணத்தை செலுத்தி ஆவணங்களை பெற்றுச் சென்றனர்.

    Next Story
    ×