என் மலர்
உள்ளூர் செய்திகள்

துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
- பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்றனர்
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சி அலுவலக்கூட்ட அரங்கில் நெமிலி, பனப்பாக்கம்,தக்கோலம் உள்ளிட்ட 3 பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
இந்த முகாமிற்கு நெமிலி பேரூராட்சி செயல் அலுவலர் பூவேந்திரன் தலைமை வகித்தார். பனப்பாக்கம் செயல் அலுவலர் குமார் முன்னிலை வகித்தார்.
இந்த பேரூராட்சிகளில் பணியாற்றும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்துகொண்டு ரத்தஅழுத்தம்,சர்க்கரை நோய், கண் பரிசோதனை, தோல் நோய் உள்ளிட்ட பிரிவுகளில் சிகிச்சை பெற்றனர்.
இதில் இளநிலை உதவியாளர் வெங்கடேசன், நந்தகுமார், திமுக இளைஞரணி செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story






