என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை, இச்சிபுத்தூர் பகுதியில் நாளை மின் தடை
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது
- அரக்கோணம் செயற்பொறியாளர் தகவல்
அரக்கோணம்:
அரக்கோணம் மின் கோட்டம் சாலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தண்டலம், மின்னல், நரசிங்கபுரம், அன்வர்திகான் பேட்டை, குண்ணத்தூர், கூடலூர், பாராஞ்சி, வேடல், அல்ட்ரா டெக் சிமெண்ட், குருவராஜப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதே போன்று புதன்கிழமை காலை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இச்சிபுத்தூர் துணை நிலையத்திற்கு உட்பட்ட இச்சிபுத்தூர், ஈசலாபுரம், எம்.ஆர்.எப்., தணிகை போளூர், வாணியம் பேட்டை, வடமாம்பாக்கம், உளியம் பாக்கம், வளர்புரம், தண்டலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று அரக்கோணம் மின்கோட்ட செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.
Next Story






