search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் கேட்டு சாலை மறியல்
    X

    குடிநீர் கேட்டு சாலை மறியல்

    • போலீசார் பேச்சுவார்த்தை
    • 50 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட கீழ்விஷாரம் பகுதியில் கடந்த சில நாட்களாக சரியாக குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் நேற்று இரவு அப்பகுதியை சேர்ந்த 50 -க்கும் மேற்பட்டோர் கீழ்விஷாரம் குளத்துமேடு அருகே காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர் .

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

    அதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×