என் மலர்
உள்ளூர் செய்திகள்

ெரயிலில் கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்
- 1 டன் சிக்கியது
- தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது
நெமிலி:
சோளிங்கர் ரெயில் நிலையத்தில் ரேசன் அரிசி கடத்துவதாக அரக்கோணம் ெரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ெரயில்வே பாதுகாப்பு படை சப் - இன்ஸ்பெக்டர் ஹேமந்த் குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் வின்சன், ரைட்டர் பாஸ்கரன் ஆகியோர் சோளிங்கர் ெரயில்வே நிலையத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ெரயிலில் ஏற்ற வைத்திருந்த சுமார் ஒரு டன் ரேசன் அரிசியை 37 மூட்டைகளில் இருந்தது. அதனை பறிமுதல் செய்து பறக்கும் படை தாசில்தார் இளஞ்செழியன் அவர்களின் ஒப்படைத்தனர்.
Next Story






