search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வந்தேபாரத் ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி
    X

    வந்தேபாரத் ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி

    • தண்டவாளத்தை கடந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    சென்னையிலிருந்து கோவை நோக்கி நேற்று பிற்பகல் வந்தே பாரத்ரெயில் புறப்பட்டு காட்பாடியை நோக்கி வந்து கொண்டிருந்தது.

    வாலாஜாவை கடந்து முகுந்தராயபுரம் நோக்கி வந்தபோது மாலை 3.40 மணியளவில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.

    அப்போது அதிவேகமாக வந்த வந்தே பாரத் ரெயிலில் அடிபட்டு அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த காட்பாடி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டனர்.

    அவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×