என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாரச் சந்தையில் செல்போன் திருடிய வடமாநில வாலிபர்கள்
- பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்
- பாப்கான் கடை வைத்து திருடினர்
நெமிலி :
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வார சந்தை நடைபெறுவது வழக்கம்.
இங்கு பாப்கான் கடை நடத்தி வந்த 2 வடமாநில இளைஞர்கள் மக்கள் கூட்டமாக இருப்பதால் இதை பயன்படுத்தி கொண்டு மக்களிடம் 5 செல்போன்களை திருடி உள்ளனர்.
பிடிபட்ட அந்த வட மாநில இளைஞர்களை அடித்து உதைத்தனர்.
இதில் காயமடைந்த இளைஞர்கள் செல்போனை திருப்பி கொடுத்தனர். நெமிலி போலீசார் வாலிபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
Next Story






