என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவிலில் நவராத்திரி துர்கா கொலு பூஜை
- நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
- பக்தர்கள் சாமி தரிசனம்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டை நேருஜி நகர் 7-வது தெருவில் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோவில் உள்ளது. நவராத்திரி 5-ம் நாளான நேற்று துர்கா கொலு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் அரக்கோணம் நகர மன்ற தலைவர் லட்சுமி, நகர மன்ற உறுப்பினர்கள் சாமுண்டீஸ்வரி, நந்தாதேவி சங்கீதா, ரஷிதா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கொலுவை கண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.
Next Story






