search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நவசபரி அய்யப்பன் கோவிலில் நவராத்திரி நிறைவு விழா
    X

    நவசபரி அய்யப்பன் கோவிலில் நவராத்திரி நிறைவு விழா

    • கொலு அமைக்கப்பட்டது
    • பூஜைகளும், பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் சபரி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ நவசபரி அய்யப்பன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த 15-ந் தேதி முதல் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டது.

    தினந்தோறும் கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகிய முப்பெரும் தேவியருக்கு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்று வந்தது.

    தெய்வங்கள், புராண இதிகாச நாயகர்கள், குருமார்கள், தேசத்தலை வர்கள் என நமது பாரம்பரிய பண்பாட்டினை பறை சாற்றும் வகையில் அழகிய பொம்மைகளை வைத்திருந்தனர்.

    பூஜைகளும், பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது.

    இதனைத்தொடர்ந்து நேற்று நவராத்திரி நிறைவு விழாவை முன்னிட்டு

    கோவில் குருசாமி ஜெயச்சந்திரன் தலைமையில் காலை கோவில் நடைதிறக்கப்பட்டு கணபதி ஹோமம், அஷ்டா பிஷேகத்துடன் நவசபரி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் மாலையில் நவராத்திரி சிறப்பு பூஜையும், ஸ்ரீ சபரி சாஸ்தா சமிதியினரின் பஜனை நடைபெற்றது.

    இதில் ராணிப்பேட்டை, சிப்காட் உள்பட சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் ஹரிவராசனம் பாடப்பட்டு, பக்தர்களுக்கு அன்ன பிரசாதமும் வழங்கப்பட்டது.

    Next Story
    ×