என் மலர்
உள்ளூர் செய்திகள்

மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை
- கடன் தொல்லையால் விபரீதம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் அன்வர் பாஷா (வயது 29) மெக்கானிக்கான இவர் தனது மனைவி பாத்திமா சோனாஸ் மற்றும் 2 மகள்க ளுடன் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தென்நந்தியாலம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்தநிலையில் இவருக்கு போதுமான வருமானம் இல்லாததாலும், கடன் தொல்லை காரணத்தினாலும் நேற்று முன்தினம் இரவு வீட் டில் யாரும் இல்லாத போது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது மனைவி ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






