என் மலர்
உள்ளூர் செய்திகள்

கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது
- போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
- தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமையில் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் சாராய மற்றும் கஞ்சா தடுப்பு வேட்டை நடத்தப்பட்டடது.
இதில் 10 கஞ்சா வழக்குகளும், 50 சாராய வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு 60 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து சுமார் 5 கிலோ கஞ்சா, 55 லிட்டர் சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் கடத்தல், விற்பனை போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடும் நபர்களை பற்றி மாவட்ட, மாநில காவல் உதவி எண்களில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும்.
மேலும் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் கடத்தல் விற்பனை போன்ற சட்ட விரோத செயலில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.






