என் மலர்
உள்ளூர் செய்திகள்

இந்து முன்னணியினர் ஆர்பாட்டம்
- கனல் கண்ணன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்
- 56 பேர் கைது
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்து முன்னணி வேலூர் கோட்டை அமைப்பாளர் ராஜேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது மாவட்ட செயலாளர்கள் மோகன், ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்பாட்டத்தில் கருத்து சுதந்திரத்தின் குரல் வலையை நசுக்கும் வகையில் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
ஆர்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 56 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் விடுவித்தனர்.
Next Story






