என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
அரக்கோணம்:
நெமிலி அடுத்த குப்புக்கல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 35) மலையில் கல் உடைக்கும் தொழில் செய்து வருகிறார்.
இவரது மனைவி பாரதி (30), இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
2 வயதில் கவிமாறன் என்ற ஆண் குழந்தை உள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று வழக்கம் போல் மீண்டும் தம்பதிக்குயிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த பாரதி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து பாரதியி்ன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக வாலாஜா பேட்டை அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனா்.
பாரதிக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, அரக்கோணம் ஏ.எஸ்.பி. அசோக் கிரிஷ் யாதவ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாரதியின் பெற்றோர் தங்களது மகளை அடித்து கொலை செய்து பின்பு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடுவதாக பாணாவரம் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்