என் மலர்
உள்ளூர் செய்திகள்

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
- திருமணமான 7 மாதத்தில் பரிதாபம்
- உதவி கலெக்டர் விசாரணை
சோளிங்கர்:
பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் (வயது 26), பெயிண்டர். இவரது மனைவி சந்தியா (20). இவர்களுக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவன் மனைவி இருவரும் சோளிங்கர் வள்ளுவர் காலனி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருந்தனர்.
தீபாவளி பண்டிகை கொண்டடுவதற்காக பெங்களூருவுக்கு செல்ல வேண்டும் என சந்தியா, சுனில்குமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் மன வேதனை அடைந்த சந்தியா வீட்டில் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலை செய்து கொண்ட சந்தியாவுக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.






