search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூலி ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் அவதி
    X

    கூலி ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் அவதி

    • தை மாத அறுவடைக்கு தயாராகி வருகின்றனர்
    • இயந்திரத்தில் நெல் நாற்று நடப்பட்டது

    நெமிலி:

    நெமிலி தாலுகாவில் தை மாத அறுவடைக்கு தயாராகும் விவசாயிகள் , கூலி ஆட்கள் பற்றாக்குறையால் இயந்தி ரத்தில் நெல் நாற்று நடும் பணியில் மும்முரமாக ஈடு பட்டுள்ளனர் . இதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் , நெமிலி தாலு காவுக்கு உட்பட்ட பகு திகளில் கூலி ஆட்கள் பற்றாக்குறையால் , பெரும் பாலான விவசாயிகள் தங் களது விளை நிலங்களில் இயந்திரங்கள் மூலம் நெல் 55 நாற்று நடும் பணியில் ஈடு பட்டுள்ளனர். இதன் மூலம் தை மாத அறுவடைக்கு தயாராகி வருவதாகவும் , அதிக லாபம் கிடைக்கும் என்றும் விவசாயிகள் தெரி வித்தனர்.

    இதுகுறித்து விவசாயி கள் கூறியதாவது:-

    ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாயம் செய் தால் , தை மாதத்தில் அறு வடை செய்யலாம் பயிர் களுக்கு தேவையான சூரிய ஒளியும் , பிராண வாயுவும் , நல்ல மழையும் கிடைத்து , விவசாயிகளுக்கு சிறப் பான கொடுக்கும் . கடுமையான கோடைக்காலங்களைச் சந்தித்த மண் . இறுகி கடின மாக மாறியிருக்கும் .

    ஆனி மழையில் இறுக்கங்கள் தளர்ந்து இதமாக இளக தொடங்கும் . இதனால் ஆடி மாதத் தில் விதைத்த நெல்மணி கள் முளைத்துள்ள நிலை யில் , நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ளோம் . ஆனால் 100 நாள் வேலை உட்பட பல்வேறு பணிகளுக்கு பலர் சென்றுவிடுவதால் , விவசாய பணிகளுக்கு போதிய கூலி ஆட்கள் கிடைப்பதில்லை .

    இதனால் விவசாயத்தில் இயந் திரபயன்பாடு என்பது மிக அவசியமாகி விட்டது . அதற்கேற்ப நவீன இயந் திரங்கள் வருகையால் வேலையாட்கள் தேவை குறைவதோடு , வேலையை விரைவாக முடிக்கவும் முடிகிறது . இயந்திரங்கள் மூலம் குறைந்த நேரத்தில் அதிக பரப்பிலான சாகுபடியும் மேற்கொள்ள முடிகிறது .

    இதன் மூலம் அதிக லாபம் கிடைக்கிறது . மேலும் அரசு சார்பிலும் மானியம் வழங் கப்படுகிறது . இதனால் இயந்திரங்கள் மூலம் நடவு பணியில் ஈடுபட்டு வருகி றோம்.இவ்வாறு அவர்கள் கூறினர் .

    Next Story
    ×