என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாலாஜா அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
ராணிபேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஞானராஜ் (வயது 58) விவசாயி.இவர் விவசாய நிலங்களில் விதை நெல்லை விதைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.
ஞானராஜ் நேற்று மதியம் சித்தாத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி மணி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், தனது மகனுடன் விதை நெல்லை விதைத்து கொண்டிருந்தார்.
அப்போது, நிலத்தின் ஒரு பகுதியில் இருந்து மின்மோட்டாருக்காக மின்சாரம் கொண்டு செல்ல அமைக்கப்பட்டு இருந்த சேதமடைந்த மின்ஒயரில் எதிர்பாராதவிதமாக ஞானராஜ் தவறி விழுந்துள்ளார்.
இதனால் மின்சாரம் பாய்ந்து ஞானராஜ் கீழே விழுந்தார். அவரது மகன் மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஞானராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்