search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி மோதி விவசாயி சாவு
    X

    லாரி மோதி விவசாயி சாவு

    • மருத்துவமனைக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    பனப்பாக்கம் அடுத்த தென் மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரன் (வயது70) இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரண த்தினால் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு தனது பைக்கில் மருத்துவமனைக்கு சென்று பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது காவேரிப்பாக்கம் அடுத்த கல்கத்தா காளியம்மன் கோவில் அருகே வரும்போது பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பின்னால் மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி கங்காதரன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் கங்காதரன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×