search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடுப்பு சுவரில் மோதி கன்டெய்னர் லாரி சேதம்
    X

    தடுப்பு சுவரில் மோதி கன்டெய்னர் லாரி சேதம்

    • அடுத்தடுத்து ஒரே இடத்தில் தொடரும் விபத்து
    • ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    சென்னையில் இருந்து கன்டெய்னர் லாரி ஒன்று ராணிப் பேட்டை முத்துக்கடை நோக்கி நேற்று இரவு எம்.பி.டிசாலை யில் வந்து கொண்டிருந்தது. ஆட்டோ நகர் அருகே வரும் போது கன்டெய்னர் லாரி சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் கன்டெய்ன ரின் முன் பகுதி சேதம் அடைந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராணிப்பேட்டை போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இந்த விபத்து நடைபெற்ற அதே இடத்தில் நேற்று முன்தினம் இரவு தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி, பஸ்சில் இருந்த 6 பேர் காயமடைந்தனர்.

    சாலையை அகலப்படுத்தாமல் சாலையின் மையப்பகுதி யில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டதாலும், போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதாலும், இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

    இதை தவிர்க்க உடனடியாக சாலையை அகலபடுத்தி, சாலையின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×