search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முட்புதரில் பதுக்கிய ரேசன் அரிசி பறிமுதல்
    X

    முட்புதரில் பதுக்கிய ரேசன் அரிசி பறிமுதல்

    • 1½ டன் சிக்கியது
    • வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்

    காவேரிப்பாக்கம்:

    பாணாவரம் பகுதியில் அமைந்துள்ள சோளிங்கர் ரெயில் நிலையத்தில் அடிக்கடி நின்று செல்லும் ரெயில்களில் ரேசன் அரிசி கடத்தி செல்கின்றனர்.

    இந்த நிலையில் சோளிங்கர் ரெயில் நிலையம் வழியாக சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரேசன் அரிசி கடத்துவதாக ராணிப்பேட்டை மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் இளஞ்செழியனுக்கு தகவல் கிடைத்தது.

    அந்த தகவலின் பேரில் நேற்று திடீரென சோளிங்கர் ரெயில் நிலையத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது ரெயிலில் கடத்துவ தற்காக நடைமேடை அருகே முட்புதரில் 25 மூட்டைகளில் மறைத்து வைத்திருந்த சுமார் 1½டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை வாலாஜாபேட்டை யில் உள்ள வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

    இந்த ஆய்வின் போது பறக் கும்படை தனி தாசில்தார் அலுவலக உதவியாளர்கள் சரத்குமார், பாலகி ருஷ்ணன், பாணாவரம் கிராம உதவியாளர் வில்சன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×