search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமுதாய வளைகாப்பு விழா
    X

    சமுதாய வளைகாப்பு விழா

    • 300 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை
    • அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த சாலை கிராமம் தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட சார்பில் சமுதாய வளைகாப்பு விழா கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு 300 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீர்வரிசை வழங்கினார்.

    அரக்கோணம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணி அலுவலர்கள் தான்யா, அம்சபிரியா, ஒன்றிய குழு தலைவர்கள் நிர்மலா சவுந்தர், பெ.வடிவேலு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் அம்பிகா பாபு, சுந்தராம்பாள் பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் சவுந்தர், தமிழ்ச்செல்வன், பெருமாள், பசுபதி, நகர கழக செயலாளர் வி.எல்.ஜோதி, நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி, துணைத் தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×