search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலாஜாவில் புத்தக கண்காட்சி நிறைவு விழா
    X

    வாலாஜாவில் புத்தக கண்காட்சி நிறைவு விழா

    • ரூ.31 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை
    • கலெக்டர் பங்கேற்பு

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலகத்துறை சார்பாக முதலாவது மாபெரும் புத்தகக் கண்காட்சி கடந்த 14-ந்தேதியில் இருந்து நேற்று வரை நடந்தது.

    நிறைவு நாளான நேற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பங்கேற்று புத்தகம் வாசித்தலின் முக் கியத்துவம் குறித்து மாணவ-மாணவிகள், பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். விழாவில் நடந்த கலை நிகழ்ச்சிகள், கருத்த ரங்குகள்,பட்டிமன்றங்கள் போன்றவற்றில் பங்கேற்று கண்டு களித்தார்.

    புத்தகக் கண்காட்சியில் 40 புத்தக அரங்குகள் அமைக்கப் பட்டு இருந்தன. 13 அரசு துறைகள் பல்துறை பணி விளக்க கண்காட்சியும், 6 உணவு விற்பனை அரங்குகளும் அமைக் கப்பட்டு இருந்தன. கண்காட்சியில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரவர்களுக்கு தேவையான புத்தகங் களும், மிகப் பெரிய எழுத்தாளர்கள் எழுதிய பல்வேறு வகை யான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.

    தினமும் புத்தகக் கண்காட்சியில் மாலை நேரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், 6 பரத நாட்டிய குழுவினரின் கலை நிகழ்ச்சிகள், மாணவ-மாணவிகள் மற்றும் பேச்சாளர்களின் 7 பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள் நடந் தன.

    பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் எழுதிய எழுத்தா ளர்களின் 10 புத்தகங்கள் மாவட்ட கலெக்டரால் தினமும் நடந்த நிகழ்ச்சிகளில் வெளியிடப்பட்டன.

    புத்தகக் கண்காட்சி நிறைவு நாள் விழாவில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் என மொத்தம் 91 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 14-ந்தேதியில் இருந்து நேற்று வரை மொத்தம் ரூ.31%, லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.குமரேஸ்வ ரன், கல்லூரி முதல்வர் பூங்குழலி, துணை கலெக்டர் கவிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், தாசில் தார்கள் ஆனந்தன், விஜயகுமார் (குற்றவியல்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×