search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோளிங்கர் நகராட்சியில் தூய்மை பணி
    X

    சோளிங்கர் நகராட்சியில் தூய்மை பணி. 

    சோளிங்கர் நகராட்சியில் தூய்மை பணி

    • முனிரத்தினம் எம்.எல்.ஏ. ெதாடங்கி ைவத்தார்
    • பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    சோளிங்கர்:

    சோளிங்கர் கராச்சியில் உள்ள கொண்டபாளையத்தில் நகராட்சி தூய்மை மக்கள் இயக்கம் சார்பில் மெகா தூய்மைப் பணி நடைபெற்றது.

    இந்த தூய்மைப் பணிக்கு நகராட்சி தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் பரந்தாமன் அனைவரையும் வரவேற்றார். நகராட்சி உறுப்பினர் காங்கிரஸ் நகர தலைவர் கோபால், திமுக உறுப்பினர்கள், சிவானந்தம், அருண் ஆதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ெமகா தூய்மை பணியில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குப்பைகளை அகற்றி தூய்மைப் பணியை தொடங்கி மேலும் இந்த பணியில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது நகராட்சி வார்டு உறுப்பினர் மோகானசண்முகம், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வடிவேல் இளநிலை உதவியாளர் எபினேசன் ஜெயராமன் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×