என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழாவில் மோதல்
- 4 பேர் மீது வழக்கு பதிவு
- போலீசார் தேடி வருகின்றனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த சீக்கராஜபுரம்,ஸ்ரீ ராம் நகர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் கூழ் வாரத்தல் திருவிழாவும், இரவில் நாடகமும் நடைபெற்றது.
அப்போது அப்பகுதியில் சுகுமார் என்பவரின் வீட்டின் அருகே சில வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர் .
இதை சுகுமார் மற்றும் அவரது தாய் அமுதா, அதே பகுதியை சேர்ந்த பாண்டியன், பாலாஜி ஆகியோர் தட்டி கேட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து அந்த வாலிபர்கள் சுகுமார் உள்பட 4 பேரையும் தாக்கியுள்ளனர். காயமடைந்த 4 பேரும் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இது தொடர்பாக சுகுமார் சிப்காட் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட சீக்கராஜபுரம் மோட்டூரை சேர்ந்த விஜி(எ) கருணாகரன், மோகன்குமார், சதீஷ்குமார், பிரபாகரன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story






