என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆற்காட்டில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு
    X

    ஆற்காட்டில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு

    • நூதன முறையில் கைவரிசை
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    சோளிங்கர் அடுத்த வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்பாய் (வயது 65). கிருஷ்ண கிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார்.

    பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு வருவதற்காக ஆற்காடு வரை நேற்று மதியம் பஸ்சில் வந்தார்.

    பின்னர் அங்கிருந்து வெங்கடாபுரம் செல்வ தற்காக ஆற்காடு பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் ராம்பாய்யிடம் ஒரு பேப்பரை கொடுத்து இதை சிறிது நேரம் வைத்திருங்கள் பின்னர் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அதன்படி அந்த மூதாட்டி பேப்பரை வாங்கி வைத்துள்ளார்.

    சிறிது நேரத்தில் மூதாட்டி சுயநினைவு இழந்தார். அப்போது அந்த நபர் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து சுய நினைவுக்கு வந்த மூதாட்டி நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இது குறித்து அவர் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×