search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்சோ வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு சான்றிதழ்கள்
    X

    ராணிப்பேட்டைமாவட்டத்தில் போக்சோ வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி சான்றிதழ்கள் வழங்கினார்.

    போக்சோ வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு சான்றிதழ்கள்

    • போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
    • பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமை தாங்கி, பொதுமக்க ளிடமிருந்து மொத்தம் 24 மனுக்களை பெற்று கொண்டு, மனுக்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    பின்னர் நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் போக்சோ வழக்கில் சிறப்பாக விசாரணை செய்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தர நடவடிக்கை மேற்கொண்ட ஆற்காடு, ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீஸ் இன்ஸ்பெ க்டர்கள் விநாயகமூர்த்தி, ஆனந்தன், ஷாகீன், வாசுகிபோலீஸ் ஏட்டுகள் முத்துராணி, பிரேமா ஆகியோரை பாராட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி சான்றிதழ்களை வழங்கினார்.

    இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விஸ்வேஸ்வரய்யா, குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×